Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பண மோசடி வழக்கு ..பிரபல நடிகை மற்றும் அமைச்சர் கைது

Advertiesment
money
, திங்கள், 25 ஜூலை 2022 (13:50 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமன முறைகேட்டில்மோசடி வழக்கில் பிரபல நடிகை அரபிதா முகர்ஜி  பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க மா நிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், அம் மா நித்தில், தொழில்துறை அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி, மா நில கல்வ்த்துறை அமைச்சராக இருந்த்போது,  அரசு  அதிகாரிகள்  மற்றும் பள்ளி ஆசிரியர்  நியமனத்தில் மோசடி நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த விசாரணையில்,அமைச்சர் பார்த்தசாரதியின் தோழியும் நடிகையுமான முகர்ஜி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
மித்த அவர் வீட்டில் இருந்து ரூ.21.2 கோடி பணம், நகைகள், உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடிகை அர்பிதா முகர்ஜி மற்றும் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூகிள் நிறுவனர் மனைவிக்கு ரூட்டு விடும் எலான் மஸ்க்!? – நெட்டிசன்கள் கிண்டல்!