Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வின்னரை வளைத்து போட்ட காங்கிரஸ் கட்சி

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (18:58 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திரையுலக பிரபலங்களை அரசியல் கட்சிகள் வளைத்து போட தொடங்கிவிட்டன. ஏற்கனவே ஒருசில நட்சத்திரங்கள் இந்த வலையில் வீழ்ந்துள்ள நிலையில் தற்போது இந்தி பிக்பாஸ் 11வது சீசன் வின்னர் ஷில்பா ஷிண்டே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நகர காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் முன்னிலையில் நடிகை ஷில்பா ஷிண்டே காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வரும் தேர்தலில் அவர் மும்பை முழுவதும் காங்கிரஸ் கட்சிக்காக தீவிர ஓட்டுவேட்டை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறித்து ஷில்பா கூறுகையில்,  'பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நாட்டை செய்துள்ளது. இதனால் இந்த கட்சியில் சேர முடிவு செய்தேன். தற்போது நமக்கு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே கொண்டு வர முடியும் என நம்புகிறேன்.  நாட்டின் அடுத்த பிரதமராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவியேற்க வேண்டும் என்பதே எனது விருப்பம். மேலும் காங்கிரஸ் கட்சியில் ஜாதி, மதம் பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments