Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....

Webdunia
திங்கள், 24 ஜூலை 2017 (11:31 IST)
மலையாள நடிகை மைதிலியுடன் தான் இருக்கும் அந்தரங்கப் புகைப்படங்களை, அவரின் முன்னாள் காதலர் வெளியிட்ட விவகாரம் கேரள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மலையாள படங்களில் நடித்து வரும் நடிகை மைதிலி, சினிமா தயாரிப்பு நிர்வாகியான கிரண் என்பவருடன் 2008ம் ஆண்டு முதல் நெருங்கி பழகியுள்ளார். ஆனால், தான் ஏற்கனவே திருமணமானவர் என்பதை கிரண் அவரிடம் மறைத்த விவகாரத்தை தெரிந்து கொண்ட பின் அவர் கிரணை விட்டு பிரிந்து விட்டதாக தெரிகிறது.
 
ஆனால், அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகவும், தேவையான பணம் கொடுக்கவில்லை எனில் அதை இணையத்தில் வெளியிடுவேன் என மைதிலியை கிரண் மிரட்டி வந்துள்ளார். ஆனால், அதை மைதிலி பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.


 

 
இந்நிலையில், அதில் சில படங்களை கிரண் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அதில் அவரும், நடிகை மைதிலியும் அரை நிர்வாணமாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மைதிலி, இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்.
 
இதன் அடிப்படையில், கிரணை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments