Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்த நடிகைகள்தான் படுக்கையை பகிர்ந்து கொள்வார்கள் - நடிகர் சர்ச்சை கருத்து

அந்த நடிகைகள்தான் படுக்கையை பகிர்ந்து கொள்வார்கள் - நடிகர் சர்ச்சை கருத்து
, வியாழன், 6 ஜூலை 2017 (11:28 IST)
திறமையில்லாத நடிகைகள்தான் வாய்ப்பிற்காக மற்றவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வார்கள் என கேரள நடிகர் இன்னொசெண்ட் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பொதுவாக சில நடிகைகள் வாய்ப்பிற்காக சினிமா துறையினரிடம் படுக்கையை பகிர்ந்து கொள்வதாக காலம் காலமாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது. சில நடிகைகளும் தங்களிடம் பலர் தவறாக நடக்க முயன்றதாக பகீரங்கமாக கூறி வருகின்றனர்.
 
கேரள சினிமா நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது அதிகம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே நடிகை பார்வதி மேனன் உள்ளிட்ட சில நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலயில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகரும், எம்.பி.யுமான இன்னொசெண்ட் “மலையாள சினிமா உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் கிடையாது. இதுவரை எங்களுக்கு அப்படி எதுவும் புகார் வந்தது கிடையாது. மோசமான பெண்கள்தான் வாய்ப்பிற்காக படுக்கையை பகிர்ந்து கொள்வார்கள்” எனக் கூறினார்.

webdunia

 

 
இந்த கருத்து கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்தை கண்டித்து பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
கேரள சினிமா உலகின் பிரபலமான நடிகர் இன்னொசெண்ட், மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டோன் ஹெஞ்ச்: இங்கிலாந்தின் விளக்கப்படாத மர்மம்....