Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனைத்து திருடர்களும் ஒன்று கூடி உருவாக்கிய கூட்டணி தான் இண்டி கூட்டணி: ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம்

அனைத்து திருடர்களும் ஒன்று கூடி உருவாக்கிய கூட்டணி தான் இண்டி கூட்டணி: ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம்

Siva

, திங்கள், 11 மார்ச் 2024 (07:36 IST)
அனைத்து திருடர்களும் ஒன்று கூடி உருவாக்கிய கூட்டணி தான் இண்டி கூட்டணி என ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம் என்பவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இண்டி கூட்டணி ஆரம்பித்த நிலையில் அந்த கூட்டணிக்குள் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சமீபத்தில் மம்தா பானர்ஜி தன்னிச்சையாக மேற்கு வங்க மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார் என்பதும் காங்கிரஸ் கட்சியை அவர் ஒரு பொருட்டாக கண்டு கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு குறைவான தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும்தான் காங்கிரஸ் கட்சியை ஒரு கட்சியாகவே கூட்டணி கட்சியினால் மதிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம் என்பவர் அனைத்து திருடர்களும் ஒன்று கூடி ஒரு கூட்டணியை உருவாக்கினார் என்றும் இருப்பினும் அவர்கள் தங்களுக்குள்ளையே ஒருவரை ஒருவர் முதுகில் குத்திக் கொண்டிருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் கட்சியின் இந்த மோசமான நிலைக்கு காரணமான ஒரே நபர் ராகுல் காந்தி மட்டுமே என்றும் அவர் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வரை அந்த கட்சியை காப்பாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் காங்கிரஸ் கட்சியின் மீது கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டாலினுக்கு கூட்டம் வராது: கமல்ஹாசனை பிரச்சாரத்திற்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள்.. குஷ்பு