Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலை முயற்சி வழக்கில் கைதானவருக்கு கொரோனா – காவல் நிலையத்தில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (17:16 IST)
புதுச்சேரியில் ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுப்பையா நகர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரை கடந்த 7 ஆம் தேதி முகமது கில்லால், சதீஷ்,உள்ளிட்ட ஐவர் கத்தியால் வெட்டியதில் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் அவரை வெட்டிய  மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட அவர்கள் ஐந்து பேரில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். மற்ற நால்வரும் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் அவர்கள் தங்கவைக்கப்பட்டு இருந்த காவல் நிலையம் முழுவதும் இன்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் அந்த காவல் நிலையத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments