Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலை முயற்சி வழக்கில் கைதானவருக்கு கொரோனா – காவல் நிலையத்தில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (17:16 IST)
புதுச்சேரியில் ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுப்பையா நகர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரை கடந்த 7 ஆம் தேதி முகமது கில்லால், சதீஷ்,உள்ளிட்ட ஐவர் கத்தியால் வெட்டியதில் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் அவரை வெட்டிய  மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட அவர்கள் ஐந்து பேரில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். மற்ற நால்வரும் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் அவர்கள் தங்கவைக்கப்பட்டு இருந்த காவல் நிலையம் முழுவதும் இன்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் அந்த காவல் நிலையத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாய் ஃப்ரெண்டை பழிவாங்க 21 வெடிக்குண்டு மிரட்டல்!? - சென்னை ஐடி பெண் ஊழியர் அதிரடி கைது!

3 இஸ்ரேலியர்களுக்கு மரண தண்டனை.. இன்று தூக்கிலிடப்பட்டு நிறைவேற்றிய ஈரான்..!

திடீரென 80 அடிக்கு உள்வாங்கியுள்ள திருச்செந்தூர் கடல்.. ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் பக்தர்கள்..!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஃபால்கன்! விண்வெளிக்கு சென்ற இந்திய வீரர் சுபன்ஷூ சுக்லா!

காதலுக்கு எதிர்ப்பு; தாயை கொல்ல காதலனை ஏவிய 15 வயது சிறுமி!

அடுத்த கட்டுரையில்
Show comments