Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சில்மிஷம் செய்த சாமியார்: ஆடையை உருவிய பெண்கள்! (வீடியோ இணைப்பு)

சில்மிஷம் செய்த சாமியார்: ஆடையை உருவிய பெண்கள்! (வீடியோ இணைப்பு)
, வியாழன், 28 டிசம்பர் 2017 (12:59 IST)
சாமியார் என்ற போர்வையில் சிலர் பெண்களிடம் சில்மிஷம் செய்வது, பாலியல் தொந்தரவு கொடுப்பது, பலாத்காரம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது போன்ற ஒரு சம்பவத்தில் ஈடுபட்ட சில்மிஷ சாமியாரை பெண்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிருந்தாவனம் என்ற பகுதியில் உள்ள ஒரு சாமியார் கடந்த சில நாட்களாக பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்து வருவதாக கூறப்பட்டது. பகவத் கீதை சொல்லிக் கொடுப்பதாக கூறி, இரண்டு பெண்களுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

 
இதனால் அந்த சில்மிஷ சாமியாரை பெண்கள் இருவர் ஆடைகளை உருவி, நீண்ட உருட்டுக் கட்டைகளைக் கொண்டு அடித்து வெளுக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பெண்கள் உருட்டுக்கட்டை அடிததில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த சாமியாரை போலீசார் வந்து மீட்டு சென்றனர்.
 
தற்போது அந்த சாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும், அந்த பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரியபாண்டியன் மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட முனிசேகர்