Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புகார் அளிக்க வந்த பெண்ணை மானபங்கப்படுத்திய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது

புகார் அளிக்க வந்த பெண்ணை மானபங்கப்படுத்திய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது

Advertiesment
புகார் அளிக்க வந்த பெண்ணை மானபங்கப்படுத்திய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது
, ஞாயிறு, 24 ஜூலை 2016 (18:03 IST)
மின்தடை தொடர்பாக புகார் அளிக்க வீட்டுக்கு வந்த பெண்ணை மானபங்கப்படுத்திய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. வை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 
டெல்லி ஜசோலா பகுதியில் வசிக்கும் ஒரு பெண் தங்கள் பகுதியில் தொடர்ந்து ஏற்படும் மின்தடை தொடர்பாக புகார் அளிப்பதற்காக மின்சாரத்துறை மந்திரியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கே இருந்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கான் என்பவர் தன்னை மானபங்கப்படுத்த முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, எம்.எல்.ஏ. அமானத்துல்லாவை இன்று கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலீசார் தாக்கியதில் ஓட்டுனர் காயம் : கரூரில் பரபரப்பு