Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார் விபத்தில் சிக்கினார் அரவிந்த் கெஜ்ரிவால்

கார் விபத்தில் சிக்கினார் அரவிந்த் கெஜ்ரிவால்
, வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (12:34 IST)
பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


 
 
பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் களமிறங்க தீர்மானித்துள்ள, அரவிந்த் கெஜ்ரிவால், அம்மாநிலத்தின் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
 
பயணத்தின் இரண்டாவது நாளான இன்று காலை ஜலந்தர் நகரில் இருந்து சீக்கிய பொற்கோவில் அமைந்துள்ள அமிர்தசரஸ் நகரை நோக்கி ஒரு இன்னோவா காரில் பயணம் அவர் செய்தார். அவருடன் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் கார்களும் சென்றன.
 
பிஏபி சவுக் பகுதியை நெருங்கியபோது, முன்னால் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு வாகனத்தின் மீது அரவிந்த் கெஜ்ரிவால் வந்த கார் வேகமாக மோதியது. காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி அடைந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. 
 
சிறிது நேரத்திற்கு பிறகு பொற்கோவிலில் தரிசனம் செய்த அவர் பஞ்சாபில் ஆம்ஆத்மி ஆட்சி அமைந்தால் பொற்கோவிலை சுற்றியுள்ள வட்டாரங்களில் மது மற்றும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்போம் என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவிற்கு பாடைகட்டி இறுதி ஊர்வலம்: வரம்பு மீறி தமிழகத்தை சீண்டும் கன்னடர்கள்