Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவசமாக சாப்பாடு கிடைக்குமென்பதால் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போன வாலிபர்

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (15:46 IST)
வறுமையில் வாடியதால், சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு வந்த இளைஞர், ஜெயிலுக்கு போனால் இலவச சாப்பாடு கிடைக்கும் என்பதால், அப்பாவி சிறுவனை கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 9 வயது சிறுவனை கொலை செய்தான். இதனால் பீகார் போலீஸார் அவனை கைது செய்து விசாரித்து வந்தனர். அவனை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தந்தையை இழந்த அந்த இளைஞர் வறுமையில் வாடி வந்துள்ளார். சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். வயிற்றுப் பிழைப்பிற்காக கடினமான வேலைகளை செய்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் தப்பு செய்துவிட்டு ஜெயிலுக்கு போனால் தங்க இடமும், உண்ண உணவும் இலவசமாக கிடைக்கும் என்று கருதிய இளைஞர், வயலில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவனை மனசாட்சியில்லாமல் கொன்றுள்ளான். இவ்வாறு அவன் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். இச்சம்பவம் பீகார் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments