Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவசமாக சாப்பாடு கிடைக்குமென்பதால் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போன வாலிபர்

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (15:46 IST)
வறுமையில் வாடியதால், சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு வந்த இளைஞர், ஜெயிலுக்கு போனால் இலவச சாப்பாடு கிடைக்கும் என்பதால், அப்பாவி சிறுவனை கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 9 வயது சிறுவனை கொலை செய்தான். இதனால் பீகார் போலீஸார் அவனை கைது செய்து விசாரித்து வந்தனர். அவனை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தந்தையை இழந்த அந்த இளைஞர் வறுமையில் வாடி வந்துள்ளார். சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். வயிற்றுப் பிழைப்பிற்காக கடினமான வேலைகளை செய்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் தப்பு செய்துவிட்டு ஜெயிலுக்கு போனால் தங்க இடமும், உண்ண உணவும் இலவசமாக கிடைக்கும் என்று கருதிய இளைஞர், வயலில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவனை மனசாட்சியில்லாமல் கொன்றுள்ளான். இவ்வாறு அவன் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். இச்சம்பவம் பீகார் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments