Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் வக்கீல் சரமாரியாக குத்திக் கொலை

Webdunia
வியாழன், 31 மே 2018 (15:40 IST)
சித்தூர் அருகே பெண் வக்கீல் ஒருவர் சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை சேர்ந்தவர் நாகஜோதி. இவரது கணவர் ஜிதேந்திரா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் வக்கீலாக பணியாற்றி வந்தனர்.
 
கணவன் - மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நாகஜோதி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார்.
 
சம்பவ தினத்தன்று நாகஜோதி, இரு சக்கரத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த மர்ம நபர்கள்,  நாகஜோதியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். இதல் ரத்த வெள்ளத்தில் சரிந்த நாகஜோதி சம்பவ இடத்திலே பலியானார்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், நாகஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பெண் வக்கீல் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments