Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல ஆண்களை திருமணம் செய்து, லட்சக் கணக்கில் மோசடி செய்த பெண் ...

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (18:22 IST)
ஹைதராபாத் நகரில் வசித்து வரும்  நரசிம்மா வேணுகோபால் என்பவர், வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதனால் அவர் மேட்ரிமோனியல் இணையதளத்தில் திருமணத்திற்கு பெண் வேண்டுமென பதிவு செய்திருந்தார்.
இந்தப் பதிவை பார்த்த, அருணா என்ற பெண் தனக்கு விருப்பம் உள்ளதாக, நரசிம்மாவை தொடர்புகொண்டு கூறியுள்ளார். அவர் நர்சிங் படிப்பை முடித்துள்ளதால் வயதான பெற்றோரை பார்த்துக் கொள்ளவும் வசதியாக இருக்குமென நினைத்து நரசிம்மா முடிவு செய்தார். ஆனால் திருமணமான  சில மாதங்களில் இருவருகுமிடையே வாக்குவாதம் எழுந்து சண்டை வரவே அருணா நகைகளை எடுத்துக்கொண்டு சென்றதாகத் தெரிகிறது. 
 
இந்நிலையில் சில நாட்களில் வீட்டுக்கு வந்துவிடுவார் என காத்திருந்த நரசிம்மா, மனைவி வராததால் அவரது வீட்டுக்குச் சென்று அழைத்துவரச் சென்றார். அப்போது  அருணாவுக்கு பல ஆண்களுடம் ஏற்கனவே திருமணமாகியுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தார் நரசிம்மா.
 
பின்னர் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். போலீஸார் , புகைப்படத்தில் அருணாவுடம் உள்ள நபர்களை விசாரித்துள்ளனர். அதில் பலரை ஏமாற்றி அவர் பணம் பறிந்திருப்பதை கண்டுபிடித்தனர்.
 
இதனையடுத்து அருணாவை கைது செய்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments