Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக விற்கு ஓட்டு போட்டதால் இளம்பெண் அடித்துக் கொலை

Webdunia
ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (15:41 IST)
வடமாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் இளம்பெண்,  பாஜகவிற்கு ஓட்டு போட்டதால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் அப்பெண்ணை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இளம்பெண் ஒருவர் ஆளுங்கட்சியான  மார்க்.கம்யூனிஸ்டிற்கு ஓட்டு போடாமல் பாஜக விற்கு ஓட்டு போட்டுள்ளார்.
 
இதனையறிந்த அந்த பெண்ணின் மாமியார், அவரை இழுத்துச் சென்று கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக் உயிரிழந்தார். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாக இருக்கும் அந்த பெண்ணின் மாமியாரை தீவிரமாக தேடி வருகின்றன்ர், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments