Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு பெண்ணின் பலாத்கார கதை: தாத்தா, உறவினர், அப்பாவின் நண்பர், மேலும் மூன்று பேர்!

ஒரு பெண்ணின் பலாத்கார கதை: தாத்தா, உறவினர், அப்பாவின் நண்பர், மேலும் மூன்று பேர்!

Advertiesment
ஒரு பெண்ணின் பலாத்கார கதை: தாத்தா, உறவினர், அப்பாவின் நண்பர், மேலும் மூன்று பேர்!
, செவ்வாய், 11 ஜூலை 2017 (15:32 IST)
மும்பையில் ஒரு பெண்ணை பல பேர் பல்வேறு காலங்களில் பலாத்காரம் செய்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. இதில் தொடர்புடையவர்களில் அவரது உறவினர்களும் உள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மும்பையின் ட்ராம்பே பகுதியில் தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார் உஷா என்னும் பெண். இவரது தந்தையும் நண்பர் ஒருவர் வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த வாரம் புதன் கிழமை வழக்கம் போல வீட்டிற்கு வந்த அந்த நண்பர் உஷாவை வெளியில் செல்லலாம் என அழைத்துள்ளார்.
 
தந்தையின் நண்பர் என்பதால் உஷா அவரிடம் சகஜமாக பழகி வந்துள்ளார். இதனால் அவரது தாயும் உஷாவை அவருடன் செல்ல அனுமதித்துள்ளார். உஷாவை வெளியே அழைத்து சென்ற அவர் கஞ்சூர்மார்கில் உள்ள ஒரு வீட்டிற்குள் கூட்டி சென்றுள்ளார்.
 
அங்கு சென்ற அவர் 19 வயது இளைஞர்கள் மூன்று பேரை போன் செய்து அழைத்துள்ளார். இவர்கள் நான்கு பேரும் உஷாவை கட்டாயப்படுத்தி வேறு இடத்துக்கு அழைத்து சென்று மாறி மாறி மிக கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர். பலாத்காரம் செய்ததோடு விட்டுவிடாமல் அவர்கள் பல நாட்கள் அவரை அடைத்து வைத்து ஆசை தீர மாறி மாறி பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
 
இதனையடுத்து தங்கள் மகளை காணவில்லை என உஷாவின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சில நாட்கள் கழித்து சக்கையாக பிழியப்பட்ட உஷாவை அவரது வீட்டிற்கு வெளியே விட்டுவிட்டு சென்றுள்ளனர். மகளின் பரிதாப நிலையை பார்த்த தாய் கதறி அழுது மகளை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தார்.
 
பின்னர் காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் வந்துள்ளது. அந்த பெண் 11 வயதாக இருக்கும் போது தனது தாத்தாவாலும், மேலும் ஒரு உறவினராலும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முற்றுலும் ஒழிக்கப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு; விழாகோலமான பாக்தாத் நகரம்