Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து; ரயில் சேவை பாதிப்பு

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (08:30 IST)
சென்னையை அடுத்த ஆவடி அருகே மின்சார ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதைத் தொடர்ந்து புறநகர் ரயில் சேவைகள் கடந்த 7 மணிநேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆவடி அருகே நேற்று இரவு மின்சார ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி, திருவள்ளூர் மார்க்கத்தில் செல்லும் விரைவு ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவு ரயில் பாதையில் ஒரு சில புறநகர் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 7 மணிநேரமாக இதே நிலை நீடிப்பதால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.வேலைக்கு செல்லும் பயணிகள் நேரத்திற்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் இன்னும் மூன்று நேரத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்து ரயில்கள் புறப்படும் என சென்னை மண்டல மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை..! கடன் பிரச்சினையால் விபரீத முடிவு.!!

கனமழையால் தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் சேதம்.!

குற்றால அருவிகளில் குளிக்கலாம்.. மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments