Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மு.க.ஸ்டாலின் குழப்பிய குட்டை: உருவாகிறது 3வது அணி

மு.க.ஸ்டாலின் குழப்பிய குட்டை: உருவாகிறது 3வது அணி
, வியாழன், 20 டிசம்பர் 2018 (07:06 IST)
ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என சமீபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதை பல அகில இந்திய எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்காததால் காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமையவிருந்த நிலையில் தற்போது 3வது அணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்வும் ஏற்க மறுத்துவிட்டனர். ஏற்கனவே மேற்குவங்க முதல்வர் மம்தாவும் ஸ்டாலின் கருத்தை மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு, உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் சரிசமமாக மக்களவைத் தொகுதிகளை பிரித்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுடன் அஜித் சிங் தலைமையிலான ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் இணைய வாய்ப்புள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 15-ம் தேதி மாயாவதியின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பாரதிராஜா சந்திப்பு! விஷால் விவகாரமா?