Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூதாட்டியை கொன்று அவரின் உடலை சாப்பிட்ட வாலிபர் கைது

Webdunia
சனி, 27 மே 2023 (21:10 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் புல் அறுக்கச் சென்ற மூதாட்டியை கொன்று அவரின் உடலை சாப்பிட்ட வாலிபரால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பளி மாவட்டம் செந்த்ரா  நகரில் அமைந்துள்ளது சாரதானா என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த  சாந்தி தேவி( 65). இவர் கடந்த வெள்ளிக்கிழமை தன் வீட்டில் உள்ள கால்நடைக்கு புல் அறுப்பதற்காக அருகிலுள்ள பகுதிக்குச் சென்றிருந்தார்.

அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் சாந்தி தேவியை கடுமையாகத் தாக்கி கல்லால் அடித்துக் கொன்றார். அதன்பின், அவரது உடலை அந்த வாலிபர் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த ஒரு பெண்ணின் உடலை வாலிபர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்த  அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்கு மக்கள் வந்து வாலிபரை பிடிக்க சென்றபோது, அவர் தப்பியோட முயன்றார். அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் வாலிபரை கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸார் விசாரிக்கையில், அந்த வாலிபர் டெல்லியைச் சேர்ந்த சுரேந்திர தாகூர்(24). இவர் தெருநாய் நடித்து ரேபிஸ் பாதிப்புக்கு உள்ளாகி, உச்சமடைந்ததால், அவர் மனரீதியாகப் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைக்குப் பின் அவரிடம் போலீஸார் விசாரிக்க உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அட்சயதிருதியை நாள்.. விலை உயர்ந்தபோதிலும் தங்கம் விற்பனை அமோகம்..!

நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

4 நாட்களில் வறண்டு போன பாகிஸ்தான் நதி.. செயற்கைகோள் அதிர்ச்சி புகைப்படம்..!

மதுரை ரயில் நிலையத்தில் பூக்கடைக்கு அனுமதி.. ஜோராக விற்பனையாகுமா மல்லிகைப்பூ?

சீமான் தலை துண்டிக்கப்படும்.. இமெயில் மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments