Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்வி அதிகாரியை செருப்பால் அடித்த ஆசிரியை

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (11:14 IST)
ஆந்திர மாநிலத்தில் பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரியை, ஆசிரியை செருப்பால் அடித்துள்ளார். இந்த சம்பவம் சக ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் மார்க்காபுரத்தில் ராம்தாஸ் நாயக் என்பவர் கல்வி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ராம்தாஸ் நாயக், பள்ளி ஆசிரியை ஒருவருக்கு சில நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். ஆசிரியை பல முறை கண்டித்த போதும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
 
சம்பவத்தன்று தனது அறையில் அமர்ந்திருந்த ஆசிரியையிடம், ராம்தாஸ் தனது வழக்கமான வேலையை காட்டியுளார். இதனால் கடுங்கோபமடைந்த ஆசிரியை தனது காலணியை எடுத்து ராம்தாஸை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக ஆசிரியர்கள், ஆசிரியையை சமாதனப்படுத்தினர். இதுகுறித்து ஆசிரியை, மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
 
நாட்டில் தினந்தோறும் பல்வேறு பாலியல் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. இதுபோல் செய்யும் காம மிருகங்களுக்கு அவ்வப்போது  கடுந்தண்டணை வழங்கினால் தான் பாலியல் கொடுமைகள் நடைபெறாமல் இருக்கும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிடிவி தினகரனுக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்ற ஈபிஎஸ்.. கூட்டணியில் இணைகிறாரா?

தாம்பரம் - கிளாம்பாக்கம் புதிய வழித்தடம்.. புதிய பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு..!

இந்தியாவில் முதல்முறையாக எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம்.. பயணிகள் வரவேற்பு..!

22 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட விழுப்புரம் அம்மன் கோவில்.. பட்டியல் இன மக்கள் வழிபாடு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்