Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய ஆசிரியர் கைது

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2018 (09:34 IST)
செல்போனில் மாணவியை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டிய உடற்பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐதராபாத் டிடி காலனியில் உள்ள மிகப் பிரபலமான சைதன்யா என்ற பள்ளியில் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அதே பள்ளியில் ரமேஷ் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
 
இந்நிலையில் ரமேஷ் அந்த பள்ளியில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவிகள் சிலரை ஆபாசமாக படம்பிடித்து அதனை மாணவிகளிடம் காட்டி தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். இல்லையென்றால் இதனை இணையத்தில் வெளியிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
 
இதனையடுத்து மாணவிகள் நடந்தவற்றை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீஸார் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments