Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக போலீஸார் ஆந்திராவில் வெட்டிப் படுகொலை

தமிழக போலீஸார் ஆந்திராவில் வெட்டிப் படுகொலை
, சனி, 13 அக்டோபர் 2018 (15:40 IST)
வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆந்திராவிற்கு சென்ற தமிழக போலீஸை ஆந்திடாவில் மர்ம நபர்கள் சிலர் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
தமிழகத்தை சார்ந்த நீலமேக அமரன் என்ற தலைமைக் காவல் அதிகாரி, கடத்தல் தொடர்பான வழக்கை விசாரிக்க ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு சென்றார்.
 
அப்போது அவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் சிலர், நீலமேகத்தை வழிமறித்து தாக்கினர். தப்பியோட முயற்சித்த அவரை மர்மநபர்கள் துரத்திச் சென்று வெட்டிக் கொன்றனர்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், நீலமேகத்தின் உடலை மீட்டு பிரேத பரிதோதனைக்கு அனுப்பி வைத்தனர். தமிழக காவல் அதிகாரி ஆந்திராவில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை பயிற்சி - வீடியோ