Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண் கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்த சப்-இன்ஸ்பெக்டர்!

Advertiesment
abuse
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. 
 
இங்குள்ள கவுரி பஜார் போலீஸ் ஸ்டேசனில் சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவர் அங்கித் சிங். அதே காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண்  கான்ஸ்டபிள் டியோரியாவிற்கும் அங்கித்துக்கும் பழக்கம் ஏற்பட்டது.
 
இந்த நிலையில், டியோரியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை அவரைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
 
இதுகுறித்து வெளியே கூறினால் தன்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார் அங்கித் சிங்.
 
இதுதொடர்பாக எஸ்.பி. சங்கல்ப் சர்மாவிடம் டியோரியா புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் அங்கித் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
 
சில தினங்களில் டியோரியாவுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும் எனவும், விரைவில் அங்கித் சிங்   கைது செய்யப்படுவார் என கவுரி பஜார் நிலைய போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜயுடன் கூட்டணி? மநீம தலைவர் கமல்ஹாசன் கூறிய பதில்