Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொட்டாவி விட்டது தப்பா? மாணவனை புரட்டி எடுத்த ஆசிரியை மீது வழக்கு

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2018 (12:39 IST)
மகாராஷ்டிராவில் பள்ளி மாணவன் ஒருவன் பிரேயரின் போது கொட்டாவி விட்டதால், அவனை ஆசிரியர் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவரும் 6 ஆம் வகுப்பு மாணவன் பள்ளி பிரேயரின் போது கொட்டாவி விட்டுள்ளான். இதனைப் பார்த்த பள்ளியின் தலைமை ஆசிரியை, மாணவனை கண்டபடி அடித்துள்ளார்.
 
இதுகுறித்து மாணவன் தனது தந்தையிடம் கூறியுள்ளான். இதனையடுத்து மாணவனின் தந்தை பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியையிடம் கொட்டாவி வருவது இயற்கை அதற்கு போய் எனது மகனை அடிப்பீற்களா எனக் கேட்டுள்ளார். தப்பு செய்தால் அடிப்போம் என தலைமை ஆசிரியை மூஞ்சு கொடுக்காமல் பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவனின் தந்தை, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் ஆசிரியை மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments