Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேஸ்புக் பதிவால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவி

Webdunia
சனி, 24 மார்ச் 2018 (09:39 IST)
மத்தியபிரதேசத்தில் ஆசிரியர்களை தேசத் துரோகி என பேஸ்புக்கில் பதிவிட்ட மாணவியை கல்லூரியில் இருந்து ஓராண்டு நீக்குவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவி அஸ்மா கான் போபாலில் உள்ள மோதிலால் விக்யான் மஹா வித்யாலயா என்ற கல்லூரியில் அறிவியல் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
 
இந்நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் நினைவு தினமான நேற்று மாணவி அஸ்மா, கல்லுாரி வளாகத்தில் நிகழ்ச்சி நடத்த கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டார். ஆனால் அதற்கு கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.
 
இதனையடுத்து கோபமடைந்த அஸ்மா கான், பகத் சிங் பற்றி நிகழ்ச்சி நடத்த தனக்கு அனுமதி அளிக்க மறுத்த ஆசிரியர்கள், தேச விரோதிகள் என பேஸ்புக்கில் பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த செயலைக் கண்டித்து அஸ்மா கானை, கல்லுாரியில் இருந்து ஒரு ஆண்டு நீக்குவதாக நிர்வாகம் அறிவித்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments