Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேஸ்புக் பதிவால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவி

Webdunia
சனி, 24 மார்ச் 2018 (09:39 IST)
மத்தியபிரதேசத்தில் ஆசிரியர்களை தேசத் துரோகி என பேஸ்புக்கில் பதிவிட்ட மாணவியை கல்லூரியில் இருந்து ஓராண்டு நீக்குவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவி அஸ்மா கான் போபாலில் உள்ள மோதிலால் விக்யான் மஹா வித்யாலயா என்ற கல்லூரியில் அறிவியல் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
 
இந்நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் நினைவு தினமான நேற்று மாணவி அஸ்மா, கல்லுாரி வளாகத்தில் நிகழ்ச்சி நடத்த கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டார். ஆனால் அதற்கு கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.
 
இதனையடுத்து கோபமடைந்த அஸ்மா கான், பகத் சிங் பற்றி நிகழ்ச்சி நடத்த தனக்கு அனுமதி அளிக்க மறுத்த ஆசிரியர்கள், தேச விரோதிகள் என பேஸ்புக்கில் பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த செயலைக் கண்டித்து அஸ்மா கானை, கல்லுாரியில் இருந்து ஒரு ஆண்டு நீக்குவதாக நிர்வாகம் அறிவித்தது.

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments