Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கன் சமைக்காததால் பெற்ற தாயை கொலை செய்த மகன்

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (10:36 IST)
ஆந்திராவில் சிக்கன் சமைக்காததால் பெற்ற தாயை, அவரது மகனே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் கிஷோர். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கிஷோர் மதுவுக்கு அடிமையானதால், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கிஷோரை விட்டு பிரிந்து சென்றனர். கிஷோர் அவரது தாயுடன் வசித்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் சம்பவ தினத்தன்று சிக்கன் எடுத்து வந்த கிஷோர், தனது தாயிடம் சிக்கனை சமைத்து வைக்கும் படி கூறிவிட்டு சென்றுள்ளார். பின் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த கிஷோர், வீட்டில் சிக்கன் சமைத்து வைக்காததால், தனது தாயுடன் வாக்கு வாதத்தில் ஈட்டுபட்டுள்ளார்.
 
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கிஷோர் பெற்ற தாய் என்றும் பாராமல் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், தப்பியோடிய கிஷோரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments