Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டூர் சென்ற அக்கா-தம்பி லாரி மோதி பலி

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (09:31 IST)
கொடைக்கானலுக்கு இரு சக்கர வாகனத்தில் டூர் சென்ற அக்கா-தம்பி லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுராந்தகத்தை சேர்ந்த லோகநாதன் என்பவருடைய மகன் பிரதாப்(21). பிரதாப், பிரதாப்பின் சித்தப்பா மகன் மெர்வின் (26), அவருடைய தங்கை கவுசல்யா (23). மெர்வினின் தோழி கயல்விழி (23) ஆகியோர் கொடைக்கானலுக்கு இருசக்கர வாகனத்தில் டூர் செய்ய திட்டமிட்டனர். அதன்படி ஒரு வாகனத்தில் பிரதாப்பும், கவுசல்யாவும், இன்னொரு வாகனத்தில் மெர்வினும், கயல்விழியும் மதுராந்தங்கத்தில் இருந்து புறப்பட்டனர்.
 
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு கன்னிமார் கோவில் அருகே அவர்கள் சென்ற போது,  பிரதாப் ஓட்டிச் சென்ற வாகனம் மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த பிரதாப்பும், கவுசல்யாவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தனர்.
 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments