பள்ளி முதல்வரை வெட்டிக்கொன்ற மர்ம நபர்கள்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (08:50 IST)
பெங்கலூருவில் பள்ளி முதல்வரை மர்ம கும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பெங்களூரு அக்ரஹாரா தாசரஹள்ளியில் ஹவனூர் என்ற சிபிஎஸ்சி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நிறுவனரும், முதல்வருமான ரங்கநாத்(20) நேற்று மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.
 
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், மாணவர்கள் முன்னிலையில் ரங்கநாத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ரங்கநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொடூர சம்பவத்தை செய்த கொளையாளி ஒருவனை காலில் சுட்டுப் பிடித்த போலீஸார் அவனிடம் விசாரணை செய்ததில், பள்ளியின் நிலம் தொடர்பான பிரச்சனையால், ரங்கநாத்தை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளான். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பீகாரில் என்.டி.ஏ ஆட்சி.. ஜீரோவாகும் பிரசாந்த் கிஷோர்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆச்சரியம்..!

இஸ்லாமாபாத் தாக்குதல்களுக்கு இந்தியா தான் காரணம்.. ஷெபாஸ் ஷெரிஃப் குற்றச்சாட்டு..!

புரியாமல் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி..!

ஞாயிறு அன்று தீபாவளி.. 2026 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை தினங்களின் பட்டியல்..!

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

அடுத்த கட்டுரையில்
Show comments