Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆம் வகுப்பு மாணவியை தலைமை ஆசிரியர் உட்பட பல மாணவர்கள் சீரழித்த கொடூரம்

Webdunia
சனி, 7 ஜூலை 2018 (10:30 IST)
பாட்னாவில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 15 மாணவர்கள் சேர்ந்து பள்ளி மாணவியை கற்பழித்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது. பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் சுமிதா என்ற மானவி 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். சுமிதா அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர்.
 
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம், சுமிதா கழிவறைக்கு சென்றபோது அவரை பின் தொடர்ந்த 5 மாணவர்கள், அவரை கற்பழித்து அதனை படமெடுத்துள்ளனர். இதனை அவர்களின் நண்பர்களுக்கு அனுப்பியதால், அவர்களும் மாணவியை மிரட்டி கற்பழித்துள்ளனர்.
 
இந்த விஷயம் பள்ளியின் இரு ஆசிரியர்களுக்கு தெரிய வரவே, அவர்கள் இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். தகப்பன் ஸ்தானத்தில் இருந்த அந்த தலைமை ஆசிரியரும், 2 ஆசிரியர்களும் மீண்டும் அந்த மாணவியை கற்பழித்துள்ளனர். இவ்வாறு 7 மாதமாக அந்த மானவர்களுடனும், ஆசிரியர்களுடனும் சிக்கி சீரழிந்துள்ளார் சுமிதா.
 
ஒரு கட்டத்தில் இதனை தாங்க முடியாத சுமிதா, இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ந்துபோன அவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.
 
புகாரின் பேரில் அந்த மனித மிருகங்கள் மீது வழக்கு பதிந்த போலீஸார்,  தலைமறைவாக உள்ள அந்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்