10 ஆம் வகுப்பு மாணவியை தலைமை ஆசிரியர் உட்பட பல மாணவர்கள் சீரழித்த கொடூரம்

Webdunia
சனி, 7 ஜூலை 2018 (10:30 IST)
பாட்னாவில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 15 மாணவர்கள் சேர்ந்து பள்ளி மாணவியை கற்பழித்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது. பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் சுமிதா என்ற மானவி 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். சுமிதா அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர்.
 
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம், சுமிதா கழிவறைக்கு சென்றபோது அவரை பின் தொடர்ந்த 5 மாணவர்கள், அவரை கற்பழித்து அதனை படமெடுத்துள்ளனர். இதனை அவர்களின் நண்பர்களுக்கு அனுப்பியதால், அவர்களும் மாணவியை மிரட்டி கற்பழித்துள்ளனர்.
 
இந்த விஷயம் பள்ளியின் இரு ஆசிரியர்களுக்கு தெரிய வரவே, அவர்கள் இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். தகப்பன் ஸ்தானத்தில் இருந்த அந்த தலைமை ஆசிரியரும், 2 ஆசிரியர்களும் மீண்டும் அந்த மாணவியை கற்பழித்துள்ளனர். இவ்வாறு 7 மாதமாக அந்த மானவர்களுடனும், ஆசிரியர்களுடனும் சிக்கி சீரழிந்துள்ளார் சுமிதா.
 
ஒரு கட்டத்தில் இதனை தாங்க முடியாத சுமிதா, இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ந்துபோன அவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.
 
புகாரின் பேரில் அந்த மனித மிருகங்கள் மீது வழக்கு பதிந்த போலீஸார்,  தலைமறைவாக உள்ள அந்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்