Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிர்சாதன பெட்டி வெடித்துச் சிதறியதில் மாணவி பலி!

Webdunia
சனி, 29 டிசம்பர் 2018 (12:10 IST)
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி என்ற பகுதியில் வசித்து வந்தார் தீபிகா. அங்குள்ள ஒரு கல்லூரியில் இவர் பிடெக் முதலாமாண்டு படித்து வந்தார். தீபிகாவின் உறவினர் திருமணத்திற்கு வீட்டில் இருந்து அனைவரும் சென்று விட்டனர் ஆனால் தீபிகாவிற்கு செமஸ்டர் தேர்வுகள் இருந்ததால் அவரால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த தீபிகாவுக்கு தாகம் எடுக்கவே குளிர்சாதன பெட்டியை திறந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக குளிர்சாதனப் பெட்டி வெடித்துச் சிதறியது.
 
இதனையடுத்து வீடு முழுவதும் கரும் புகைசூழ்ந்திருந்தது.’ வெடிக்கும்’ சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீபிகாவின் வீட்டை பார்த்த போது வீட்டில் இருந்து புகை வந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 
 
சில நிமிடங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீபிகா வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றனர். ஆனால் புகையுடன் தீபிகா சடலமாக கிடந்துள்ளார்.
 
இதனியடுத்து தீபிகாவின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார்  அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், குளிர்சாதனப் பெட்டி வெடித்ததற்கான காரணம் பற்றி போலீஸார் தீவிர விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments