Webdunia - Bharat's app for daily news and videos

Install App

41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்த பாதிரியார்

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2023 (14:23 IST)
பாதிரியார் ஒருவர் 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாலராமபுரம் அருகேயுள்ள உச்சக்கடை பகுதியில் வசிப்பவர் மனோஜ்(50). இவர், பெங்களூரில் ஆங்கிலிக்கன் சபை பாதிரியாராக உள்ளார்.

இந்த நிலையில், இவருக்கு ஐயப்பன் மீது ஈர்ப்பு இருந்ததால், 41 நாட்கள் இருந்து இருமுடி கட்டி, சபரிமலை கோவிலுக்குச் செல்ல முடிவெடுத்தார்.

இதற்காக திருவனந்தபுரம் திருமலையில், உள்ள கோவியில் மாலை அணிந்து  கடந்த மாதம் விரதம் தொடங்கி,  தினமும் சாமி தரிசனம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 41  நாட்கள் விரதம் முடிந்ததும் பாதிரியார் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டார்.

 மகாதேவர் கோயிலில் இருமுடி கட்டினார். அவருடன் ஐந்து பேர் இருமுடி கட்டி அங்கிருந்து  புறப்பட்டன  நிலையில், சபரிமலை கோவிலில் 18 ஆம் படி வழியாக சன்னிதானத்திற்கு சென்று பயபக்தியுடன்  ஐயப்பனை வழிபட்டார்.

இந்த நிலையில், பாதிரியார் மனோஜ் மீது ஆங்கிலிக்கன் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதில், ஆலயத்தில், திருப்பலி உள்பட சடங்குகள் நடத்த அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்து டிக்கெட் Payement Fail ஆனால் அரை மணி நேரத்தில் பணம் ரிட்டர்ன்! - போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு!

நான் மோசடி செய்துட்டு ஓடினேனா? என்ன நடந்தது தெரியுமா? - முதல்முறையாக மனம் திறந்த மல்லைய்யா!

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments