Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜீவ் கொலையாளிகள் போல் என்னையும் விடுதலை செய்யுங்கள்: சாமியார் மனு

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (14:31 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ய உடந்தையாக இருந்ததாக கூறப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர்களை போலவே என்னையும் விடுதலை செய்யுங்கள் என சாமியார் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சொத்துக்காக மனைவியை கொலை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது ஜெயிலில் இருப்பவர் 80 வயது சாமியார் சுவாமி ஷரத்தானந்த். இவரது சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
அந்த மனுவில் ஒரு கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு பிறகு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தனக்கு ஒரு நாள் கூட பரோல் கிடைக்கவில்லை என்றும் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார். 
 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யப்பட்டது போல் என்னையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments