Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டின் முன் சிறுநீர் கழித்த நபர் மீது புகார் கொடுத்ததால் துப்பாக்கிச் சூடு!

வீட்டின் முன் சிறுநீர் கழித்த நபர் மீது புகார் கொடுத்ததால் துப்பாக்கிச் சூடு!
, வியாழன், 5 ஜனவரி 2023 (14:34 IST)
மத்திய பிரதேச மாநிலம்  நாயகோன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு  கிராமத்தில் வீட்டின் முன் சிறுநீர் கழித்த நபரை தட்டிக் கேட்ட மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம்  நாயகோன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கஒட் கிராமத்தில் பிந்து ஷர்மா என்ற நபர், அப்பகுதியில் விஷாஷ் சிங் என்பவரின் இல்லத்தின் முன்பு சிறு நீர் கழித்து வந்துள்ளார்.

சுகாதார சீர்கேடு விளைவிக்கும் இந்த செயலுக்கு விகாஷ் சிங்கின் குடும்பத்தினர்   பிந்து சர்மாவிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். இதையடுத்து, போலீஸிலும் புகார் அளித்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த பிந்து ஷர்மா, குடிபோதையில், தன் ஒருவருடன் விஷாசஷின் வீட்டிற்குச் சென்று, அவரது குடும்பத்தினர் மீது  துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அருகில் உள்ளோர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவத்தில் 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறறது. போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவில் 95 சதவீதம் உருமாறிய ஓமிக்ரான் பரவல்: அதிர்ச்சி தகவல்