Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியையின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற நபர்

Webdunia
புதன், 4 ஜூலை 2018 (10:42 IST)
ஜார்கண்டில் நபர் ஒருவர் பள்ளி ஆசிரியையின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் செராய்கெலா-கர்ஸ்வான் மாவட்டத்தை சேர்ந்தவர் சுக்ரா ஹெஜா(30). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து  வந்தார்.
 
இந்நிலையில் நேற்று மதியம் பள்ளிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவன், ஆசிரியை சுக்ராவை நோக்கி வேகமாக ஓடி வந்தான். அங்கிருந்தவர்கள் அவனை பிடிக்க முற்பட்டபோது அவன் வைத்திருந்த கத்தியை காட்டி அனைவரையும் மிரட்டியுள்ளான். பின் சுக்ராவை அங்கிருந்து இழுத்துச் சென்று அவரது தலையை துண்டித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவனை கற்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். வலிதாங்க முடியாத அவன் ஆசிரியையின் தலையோடு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளான்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆசிரியையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின் தலைமறைவாக இருந்த அந்த மர்ம நபரை பிடித்து விசாரித்ததில் அவன் பெயர் ஹரி என்றும் அவன் மனநலம் பாதிக்கப்பட்டவன் என்பதும் தெரியவந்தது. இருந்தபோதிலும் எதனால் அவன் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை இழுத்துச் சென்று கொன்றான் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments