Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மாடியோவ்..! புனேவில் உருவான கொசு சூறாவளி! பீதியில் மக்கள்! – வீடியோவை நீங்களே பாருங்களேன்..!

Prasanth Karthick
திங்கள், 12 பிப்ரவரி 2024 (09:02 IST)
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஆற்றுப்பகுதியில் ஆயிரக்கணக்கான கொசுக்களுடன் உருவான சூறாவளி அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.



வளிமண்டல வெப்பநிலை மாற்றம், காற்று சூடாவதன் காரணமாக சூறாவளி ஏற்படுகிறது. மணல் சூறாவளி, கடலில் உருவாகும் நீர் சூறாவளி என பலவகை சூறாவளிகளை பார்த்திருப்போம். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் வித்தியாசமாக பல்லாயிரக்கணக்கான கொசுக்கள் உள்ள சூறாவளி ஒன்று உண்டாகியுள்ளது.

புனேவில் உள்ள முலா முதா ஆற்றில் இந்த சூறாவளி உருவாகியுள்ளது. சாதாரணமாக உருவான இந்த சூறாவளியில் ஆற்றின் மேற்படுகையில் இருந்த ஏராளமான கொசுக்களும் இழுக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான கொசுக்கள் சூழ்ந்த கொசு சூறாவளியாக மாறியுள்ளது.

ALSO READ: மரண தண்டனை விதிக்கப்பட்ட கடற்படையினர் விடுதலை! – கத்தாரிலிருந்து இந்தியா திரும்பினர்!

இதை கண்ட அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த சூறாவளி மக்கள் வசிக்கும் பக்கம் வந்தால் இந்த ஆயிரக்கணக்கான கொசுக்களும் மக்கள் வாழ்விடங்களில் புகுந்து விடும். இதனால் அப்பகுதி மக்கள் ஏராளமான உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும். அதனால் இந்த சம்பவம் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கொசு சூறாவளி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments