Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுமியைக் கொலை செய்து சடலத்துடன் வன்புணர்வு செய்த நபர் !

சிறுமியைக் கொலை செய்து சடலத்துடன் வன்புணர்வு செய்த நபர் !
, செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (17:03 IST)
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஆறுவயது உள்ள சிறுமியைக் கொலை செய்ததாக சமீபத்தில் காப்பாளர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். 
அதன் பின்னர் மருந்துவமனையில் நடந்த சோதனையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. சிறுமி தன் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஒருநாள் காணவில்லை என்று தெரிகிறது. 
 
இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர். அதன் பின்னர் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், கொல்லப்பட்ட சிறுமியை சோனுவுடன் பார்த்ததாக அங்குள்ள குழந்தைகள் கூறியுள்ளனர்.
 
இதனையடுத்து போலீஸார் சோனுவை கைது செய்து போலீஸார் விசாரித்த போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.மேலும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் போது அவரை கொலை செய்துவிட்டு பின்னர் சடலத்துடன் வன்புணர்வு செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
 
இதுகுறித்து இவ்வழக்கை விசாரித்துவரும் அதிகாரி கூறியுள்ளதாவது :
 
’குற்றவாளி சோனு என்பவர் கிராமத்தில் உள்ள கோழிப்பண்னையில் வேலைபார்த்து வந்துள்ளார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் சிறுமி சப்தம் போட்டு கூச்சலிட்ட போதிலும் இதை அவர் தொடர்ந்துள்ளார்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்திடம் விசாரணை: தேர்தல் அதிகாரி அதிரடி