Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள முதல்வரை கத்தியால் குத்த முயன்ற நபர் கைது!

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2018 (16:00 IST)
கேரள முதல்வர் பினராயி விஜயனை கத்தியால் குத்த முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 
டெல்லியில் நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தில் பங்கேற்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டெல்லி சென்றுள்ளார். இன்று காலை 9.30 மணியளவில் அங்கு மர்ம நபர் ஒருவர் கத்தியை கையில் வைத்துக்கொண்டு, பினராயி விஜயன் தன்னை வஞ்சித்துவிட்டதாக கூறி தற்கொலை செய்யப் போவதாக கத்தியுள்ளார்.
 
இதைத்தொடந்து பினராயி விஜயன் பாதுகாவலர்கள் அவரை தடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவர் இரண்டு முறை முதல்வரை சந்தித்தும் அவரது பிரச்சனையை முதல்வர் தீர்க்கவில்லை என்பதும் தெரியவந்தது.
 
மேலும் அந்த நபர் முதல்வர் பினராயி விஜயனை கத்தியால் குத்த வந்ததாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments