Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் இரண்டு வங்கி தேர்வுகள்: விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (09:45 IST)
ஒரே நாளில் இரண்டு வங்கி தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் கணினிமயமாகிவிட்டதால் வங்கிக்கு ஆள் எடுப்பதே அபூர்வமாக உள்ளது. இந்த நிலையில் IBPS என்ற அரசு வங்கி அமைப்பும், லட்சுமி விலாஸ் வங்கியும் தனித்தனியே ஊழியர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்களை வரவேற்றது. இந்த இரண்டு வங்கி தேர்வுகளுக்கும் பட்டதாரி இளைஞர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில் வரும் 20ஆம் தேதி தேர்வு நடைபெறவுள்ளதாக இரண்டு வங்கி அமைப்புகளும் அறிவிப்பு செய்துள்ளன. இதனால் இரண்டு வங்கிகளுக்கும் விண்ணப்பம் செய்தவர்கள் தற்போது ஒரு தேர்வை மட்டுமே எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே ஏதாவது ஒரு தேர்வின் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments