Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிபோதையில் 3 மாத கைக் குழந்தையை அடித்துக் கொன்ற கொடூர தாய்

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (12:06 IST)
அசாமில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர் தனது 3 மாத கைக் குழந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் நாகோம் மாவட்டம் பொற்கொலா என்ற இடத்தை சேர்ந்தவர் ருப்ஜோதி. இவரது கணவர் கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு தம்பதியினருக்கு, ஆண் குழந்தை பிறந்துள்ளது. ருப்ஜோதிக்கு குடிப்பழக்கம் உண்டு.
 
இந்நிலையில் கடந்த 5 தினங்களுக்கு முன்னர் குடிபோதையில் இருந்திருக்கிறார்  ருப்ஜோதி. அப்போது அவருடைய 3 மாத கைக்குழந்தை அழுதுள்ளது. ருப்ஜோதி குழந்தையை சமாதானம் செய்ய முயற்சி செய்திருக்கிறார். ஆனால் குழந்தை சமாதானம் ஆகவில்லை. இதனால் ஆத்திரமுற்ற ருப்ஜோதி, பிஞ்சுக் குழந்தை என்றும் பாராமல், குழந்தையை அடித்தே கொன்று, பிணத்தை அருகிலுள்ள குட்டையில் வீசியுள்ளார்.
இதனையடுத்து குழந்தை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நேற்று குழந்தையின் பிணம் குட்டையில் மிதந்துள்ளது. போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். 
 
ருப்ஜோதி மீது சந்தேகித்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments