பணக்காரன் என்று பொய் சொன்ன காதலன் – கோபத்தில் கோவை சரளாவாக மாறிய காதலி

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (15:54 IST)
இளைஞர் ஒருவரை பெண் ஒருவர் சரமாரியாத அடித்து உதைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சமீப காலமாக சோசியல் மீடியாக்களில் பேசி பழகி காதலில் ஈடுபடுவது, திருமணம் செய்து கொள்வது போன்ற சம்பவங்கள் சாதாரணமாக நடந்து வருகிறது. அதேபோல ஃபேஸ்புக், வாட்ஸப் மூலமாக பழக்கமாகி குற்ற செயல்களில் ஈடுபடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த சம்பவம் அப்படியான ஒரு வினோத சம்பவம்தான்.

இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பெண் ஒருவருடன் பழக்கமாகி இருக்கிறார். அந்த பெண்ணிடம் பேசும்போதெல்லாம் தான் பெரிய பணக்காரன் என்றும், கார், பங்களா வைத்துக்கொண்டு மில்லியன்களில் புரள்வதாகவும் கதையளந்து விட்டிருக்கிறார். அந்த பெண்ணும் இவர் சொன்னதை நம்பி அவருடன் காதலில் விழுந்திருக்கிறார்.

அந்த நபரோடு இருந்த காதலால் வீட்டில் பேசியிருந்த திருமணத்தையும் நிறுத்தியிருக்கிறார் அந்த பெண். சில நாட்களுக்கு பிறகுதான் தன் காதலன் தன்னிடம் பெரிய பணக்காரன் என்று சொன்னதெல்லாம் பொய் என்று தெரிய வந்திருக்கிறது. கோபமான அந்த பெண் தனக்கு தெரிந்த சிலரை அழைத்து கொண்டு அந்த இளைஞனின் வீட்டிற்கே சென்று விட்டார். கோபத்தின் உச்சத்தில் இருந்த பெண் அந்த இளைஞனை அடித்து, உதைத்து, துவைத்து எடுத்துவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சித்த பெண்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!.. பெங்களூர் பறக்கும் ரஜினிகாந்த்!...

பிறந்தநாளன்று தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்ட காவலர்!.. வேலூரில் சோகம்...

பிகார் பெண் எம்.பி. இரண்டு முறை வாக்களித்தாரா? இரு கைகளிலும் மை இருந்ததால் சர்ச்சை..!

8க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதால் 6 ஆடுகள் பலி.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments