Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிட்னி விற்பனைக்கு - போஸ்டர் அடித்து ஒட்டிய விவசாயி!

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (17:12 IST)
உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் வங்கிகள் கடன் தர மறுத்ததால் தனது சிறுநீரகத்தை விற்கப் போவதாக போஸ்டர் அடித்து ஒட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள சஹாரான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்குமார். இவர் பிரதான் மந்திரி கோசல் விகாஸ் யோஜனா மையத்தில் பால்பண்ணை படிப்பை முடித்திருக்கிறார். சொந்தமாக தொழில் தொடங்க எண்ணிய ராம்குமார் தனது சான்றிதழ்களை கொண்டு வங்கியில் கடன் வாங்க முயற்சித்திருக்கிறார். ஆனால் அவருக்கு எந்த வங்கியும் கடன் கொடுக்க முன் வரவில்லை. சில வங்கிகள் கடன் கொடுப்பதாக கூறி இழுத்தடித்து இருக்கின்றன.

இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் தனது சிறுநீரகத்தை விற்பதாகவும் அதை பெற்றுக் கொண்டு யாராவது பணம் தர வேண்டும் என்றும் போஸ்டர் அடித்து பல பகுதிகளில் ஒட்டியிருக்கிறார். சட்டப்படி சிறுநீரகத்தை விலைக்கு விற்பது குற்றமாகும். எனினும் ராம்குமாரின் மன உளைச்சலை கருத்தில் கொண்டு எதனால் அவருக்கு வங்கிகள் கடன் கொடுக்க மறுத்தன என்பது குறித்து விசாரிப்பதாக சஹாரான்பூர் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments