Publish Date: Thu, 12 Jan 2023 (15:42 IST)
Updated Date: Thu, 12 Jan 2023 (15:46 IST)
கொல்கத்தாவில் உள்ள மார்க்கெட்டில் இன்று தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா மா நிலத்தில் உள்ள மக்கள் கூடும் பிரபல அங்காடியில் இன்று காலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தக் கடையில் இருந்து தீ அருகில் உள்ள 100க்கும் மேற்பட்ட கடைகளுக்குப் பரவியதால் இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் காயமடைந்த ஒரு கடையின் உரிமையாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தத் திடீர் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.