ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் இரவில் தரையிறங்கிய போர் விமானம்

Webdunia
வியாழன், 25 மே 2023 (21:20 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில், மிக்-29கே ரக போர் விமானம் முதல் முறையாக இரவில் தரையிறங்கியது.

நேற்றிரவு அரபிக் கடலில் கப்பல் சென்று கொண்டிருக்கும்போது, இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பொதுவாக இரவு நேரத்தில் போர்க்கப்பலில் விமானத்தை விமானத்தை தரையிறங்குவது சவாலானது என்று கூறப்படும் நிலையில், இந்தியா இந்த சாதனையை செய்துள்ளது.

இதுகுறித்து இந்திய கடற்கடை, ''இரவு  நேரத்தில் போர்க்கப்பலில் விமானத்தை தரையிறக்குவது சவாலானது. ஆனால், இந்த சோதனையை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது என்பது ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் பணியாளர் மற்றும் கடற்படை விமானிகளின் மனவுறுதியையும், திறமையையும்  நிரூபித்துள்ளது'' என்று தெரிவித்துள்ளது.

மேலும் இரவு நேர லேண்டிங் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய கடற்படையினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுகள் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments