Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ரேடியோ ஜாக்கி அடித்துக் கொலை

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (11:56 IST)
கேரளாவை சேர்ந்த பிரபல ரேடியோ ஜாக்கியான ரசிகன் ராஜேஷ் என்பவர் மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ரசிகன் ராஜேஷ்(36).  ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிய இவர் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடியும், பல குரல்களில் பேசியும் ரசிகர்களை மகிழ்விப்பதில் வல்லவர். கேரளாவில் இவரை தெரியாத மக்களே இல்லை. இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு.
 
இந்நிலையில் ராஜேஷ் மாதவூரில் ரெக்கார்டிங்கை முடித்துக்கொண்டு  நண்பர் குட்டனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், ராஜேஷ் மற்றும் குட்டனை பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஷ், சிகிச்சை பலனின்றி இறந்தார். குட்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய குற்றவாளிகளையும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ம் வகுப்பு மாணவன் பள்ளியில் தற்கொலை! பேருந்துகளை கொளுத்திய உறவினர்கள்? - திருநெல்வேலியில் அதிர்ச்சி!

டிரம்புக்கு 20ல் ஒருவருக்கு பாதிக்கும் அரிய நோய்.. இதயத்திற்கு செல்லும் ரத்தம் திரும்பவில்லை என தகவல்?

அமெரிக்க குழந்தையை தத்தெடுக்க அனுமதி இல்லை.. தம்பதிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

இந்தி தேசிய மொழி தான் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஜெகந்நாதன் ரெட்டி பரபரப்பு கருத்து..!

மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட கணவனுக்கு விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments