Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போதையில் பாம்பை வம்புக்கு இழுத்த ஆசாமி! – மல்லுக்கட்டிய பாம்பு!

Advertiesment
போதையில் பாம்பை வம்புக்கு இழுத்த ஆசாமி! – மல்லுக்கட்டிய பாம்பு!
, சனி, 4 ஜனவரி 2020 (14:46 IST)
ராஜஸ்தானில் மது போதையில் பாம்பிடம் தகராறு செய்த ஆசாமியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் தவ்சா பகுதியை சேர்ந்த ஆசாமி ஒருவர் நன்றாக மது அருந்திவிட்டு வயல்வெளியில் கிடந்திருக்கிறார். அந்த பக்கமாக கருநாகம் ஒன்று சென்று கொண்டிருந்திருக்கிறது. அதை செல்லவிடாமல் வந்து குறுக்கே படுத்த அந்த ஆசாமி அதை கையில் பிடித்திருக்கிறார்.

அந்த பாம்பு தன்னால் முடிந்த அளவு அவரை கொத்தி விட்டு தப்ப முயன்றிருக்கிறது. ஆனால் போதையில் பாம்பை விடாமல் துரத்தி சென்று தொடர்ந்து இம்சித்திருக்கிறார் ஆசாமி. இதனால் சோர்வுற்ற பாம்பு சுருண்டு விழுந்திருக்கிறது. அதை எடுத்து கழுத்தின் மேல் போட்டுக் கொண்டிருந்திருக்கிறார் ஆசாமி.

பிறகு பொதுமக்கள் அவரிடமிருந்து பாம்பை மீட்டுவிட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராக ஜெகன் மோகன் ரெட்டிக்கு உத்தரவு !