Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பனா டா நீ? பெற்ற குழந்தையை குடிபோதையில் தூக்கி அடித்த தந்தை

Webdunia
செவ்வாய், 10 ஜூலை 2018 (09:17 IST)
தெலுங்கானாவில் தந்தை ஒருவர் பெற்ற மகனை குடிபோதையில் ஆட்டோவில் தூக்கி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் வசித்து வந்தார். அந்த நபர் போதைக்கு அடிமையானதோடு தனது மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டும் வந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அந்த நபர், தனது மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் சண்டை முற்றிப்போகவே கோபத்தை அந்த பிஞ்சுக் குழந்தையிடம் காட்டியுள்ளான் அந்த கொடூர தந்தை. குழந்தையை வெளியே இழுத்து வந்து அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது வேகமாக தூக்கி அடித்தார். மேலும் தலைகீழாக சிறுவனை பிடித்த நிலையில், தனது மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனை தடுக்க போன அப்பகுதி மக்களையும் மிரட்டியுள்ளார் அந்த நபர்.
 
இதனை அப்பகுதி மக்கள் வீடியோவாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலாகவே போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அந்த குழந்தையின் தந்தையை தேடி வருகின்றனர். அடிப்பட்ட குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்பொழுது நலமாக உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments