Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை பக்தர்களோடு நடைபயணம் செல்லும் நாய்! – ஆச்சர்யமளிக்கும் வீடியோ!

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (14:46 IST)
சபரிமலை அய்யப்பன் கோவில் செல்லும் பக்தர்களோடு 480 கி.மீ தூரத்திற்கு நாய் ஒன்று பயணித்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தற்போது கார்த்திகை மாதம் தொடங்கிவிட்ட நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் பலர் மாலை போட்டுக்கொண்டு பயணித்து வருகின்றனர். சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்குக்காக நடை திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திர பிரதேசத்தின் திருமலை பகுதியிலிருந்து 13 அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்துக் கொண்டு நடைப்பயணமாகவே சபரிமலைக்கு புறப்பட்டுள்ளனர். அப்போது அவர்களை நாய் ஒன்று பின் தொடர்ந்து வந்திருக்கிறது. சிறிது தூரத்தில் நின்று விடும் என்று பார்த்தால் தொடர்ந்து வந்து கொண்டே இருந்திருக்கிறது.

பக்தர்கள் செல்லும் வழியும் சமைக்கும் உணவுகளை சாப்பிட்டுக்கொண்டு அவர்களோடே 480 கி.மீ தொடர்ந்து பயணம் செய்து வந்துள்ளது. பக்தர்களோடு நாயும் சபரிமலைக்கு பாத யாத்திரையாக செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments