Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.1 பெற்றுக்கொண்டு மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் !

ரூ.1  பெற்றுக்கொண்டு மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் !
, திங்கள், 15 பிப்ரவரி 2021 (21:58 IST)
ஒரு மருத்துவர் ரூ.1 மட்டுமே பெற்றுக்கொண்டு மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

இந்த உலகம் மனிதநேயமிக்க மனிதர்களால் இன்னும் துடிப்புடன் வாழ்ந்து கொண்டுதானுள்ளது என்பதற்கு அன்றாடம் நாம் காணும் இந்த உலகில் எத்தனையோ மனிதர்கள் உதாரணங்களாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் ஒரு மருத்துவர் ரூ.1 மட்டுமே பெற்றுக்கொண்டு மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இவரது இந்த மனிதநேயமான செயல் எல்லோருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஷ்வரில் வசித்துவருபவர் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் சங்கர் ராம்சந்தானி. இவர் அங்குள்ள மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென விரும்பி ஒரு ரூபாய் கிளினிக் என்ற பெயரில் ஆரம்பித்து மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

மருத்துவக்கல்லூரி பேராசிரியர் சங்கர் ராம்சந்தானியின் மனிதாபிமானமிக்க செயலுக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்