Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் தரிசனம் செய்ய வந்த தமிழர் மரணம்..

Arun Prasath
வெள்ளி, 17 ஜனவரி 2020 (16:52 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரிசையில் நின்ற தமிழக பக்தர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல லட்சம் பக்தர்கள் அனுதினமும் தரிசனம் செய்ய வருகை புரிகிறார்கள். இந்நிலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் சென்றுக்கொண்டிருந்த போது, வரிசையில் நின்ற 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் தீடீரென மார்பை பிடித்து கீழே விழுந்தார்.

உடனடியாக அவரை தேவஸ்தான அதிகாரிகள் மீட்டு திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

பின்பு அவரது சட்டை பையை போலீஸார் சோதனை செய்ததில் வேலூரில் இருந்து திருப்பதிக்கு வந்ததற்கான பஸ் டிக்கெட் இருந்துள்ளது.  இந்நிலையில் இறந்தவர் வேலூரை சேர்ந்தவரா அல்லது அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொறுப்பு டி.ஜி.பி. நியமனம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் முறையீடு..

சென்னை சூளைமேடு மழைநீர் கால்வாயில் வாய் கட்டப்பட்ட நிலையில் சடலம்: மாநகராட்சியில் பரபரப்பு

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு: மத்திய அரசுக்கு CPI இரா.முத்தரசன் வேண்டுகோள்

நடனமாடி கொண்டிருந்தபோது பிரிந்த உயிர்! ஓணம் கொண்டாட்டத்தின்போது சோகம்..!

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்! 800 பேர் பலி! - ஓடிச்சென்று உதவிய இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments