Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரத மாதாவுக்கு மாலை அணிவித்த தலித் மாணவருக்கு அடி,உதை! – உ.பியில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 26 ஜனவரி 2023 (09:34 IST)
உத்தர பிரதேசத்தில் பாரத மாதாவுக்கு மாலை அணிவிக்க சென்ற தலித் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரில் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தலித் மாணவர் அர்ஜூன் ராணா படித்து வருகிறார். சமீபத்தில் அங்குள்ள பாரத மாதா சிலைக்கு அர்ஜூன் மாலை அணிவிக்க சென்றுள்ளார். ஆனால் அவர் காலணி அணிந்து சென்றதாக காரணம் சொல்லி பிற மாணவர்கள் அவரை தடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சினை முடிந்தாலும் அர்ஜூன் மீது அங்குள்ள பிற சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரி மைதானத்தில் இருந்த அர்ஜூன் ராணாவை ஒரு மாணவ கும்பல் சென்று கடுமையாக அடித்து, உதைத்து தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த அர்ஜூன் ராணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவர் கும்பல் அவரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவான மாணவர்களை தேடி வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments