Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொம்மை நோட்டுகளை வைத்து 2 லட்சத்திற்கு நகை வாங்கிய மோசடி ஜோடி

Advertiesment
பஞ்சாப்
, வியாழன், 25 அக்டோபர் 2018 (11:32 IST)
பஞ்சாப்பில் பொம்மை ரூபாய் நோட்டுகளை வைத்து 2 லட்சத்திற்கு நகை வாங்கி ஏமாற்றிய ஜோடியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் செயல்பட்டு வரும் நகை கடைக்கு சென்ற ஜோடியினர் 59 கிராம் தங்க நகைகளை வாங்கினர். பின்னர் 2 லட்சம் ரூபாயை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து வேகமாக காரில் சென்றனர்.
 
அவர்கள் தந்த பணத்தை பார்த்த கடைக்காரருக்கு பேரதிர்ச்சி.. ஏனென்றால் அவர்கள் தந்த பணம் குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுக்கள் ஆகும். 
 
இதுகுறித்து கடைக்காரர் போலீஸிடம் புகார் அளித்ததையடுத்து போலீஸார் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலியானது 20 தொகுதிகள் –இடைத்தேர்தல் எப்போது?