Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் அளித்த காசோலை திரும்பி வந்ததால் அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 10 ஜூன் 2018 (09:15 IST)
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு பரிசாக அளித்த காசோலை வங்கியில் திருப்பி அனுப்பட்டதால்  மாணவர் அதிர்ச்சியடைந்தார். 
உத்தர பிரதேசத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.5 சதவிகித மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 7 வது இடம் பிடித்த மாணவன் அலோக் மிஸ்ராவிற்கு கடந்த 29ம் தேதி உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை பரிசாக அளித்தார். 
 
இதனை மாணவனின் தந்தை வங்கியில் டெபாசிட் செய்தார், ஆனால் அந்த காசோலை திருப்பி அனுப்பட்டது. இதனையடுத்து மாணவனின் தந்தை வங்கிக்கு சென்று விசாரித்தபோது காசோலையில் உள்ள கையெழுத்து பொருந்தத்தால் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் காசோலை திருப்பி அனுப்பப்பட்டற்கான அபராதத் தொகையும் வங்கி அதிகாரிகள் வசூலித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த பிரச்சனை வெளியே தெரிந்துவிட்டால் சர்ச்சையாகி விடும் எனக் கருதி உடனடியாக உத்தர பிரதேச பள்ளிக்கல்வித்துறை மாணவன் அலோக் மிஸ்ராவைப் அழைத்துத் திருப்பி அனுப்பப்பட்ட காசோலைக்கு பதிலாக வேறு காசோலையை வழங்கியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments